Showing posts with label கல்லூரி காலங்கள். Show all posts
Showing posts with label கல்லூரி காலங்கள். Show all posts

Wednesday, December 3, 2014

நாதனும் குருவும் !!!!!!!

நெறைய நாள் காலேஜுக்கு வெளியேயும்  கொஞ்ச நாள் காலேஜுக்கு  உள்ளேயும் படிக்கிறோம்ன்னு  சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த அந்த நாள்ல, எங்கள கொஞ்சம் தெறிக்க விடுற ஆள் யாருன்னா எங்க காலேஜ் வாட்ச்மேன்கள் ,
#1:நாதன் :
அவரு பேரு நாதன். மெல்லிசா ஊதினா பறக்குற மாதிரி இருப்பார், ஆனா டூட்டில ரொம்ப வெறைப்பா இருப்பாரு.   காலையில  எட்டரைக்கு மேல மெயின் கேட்டை பூட்டிருவாங்க.  அதுக்கு காவலா  இந்த ஆளு உட்கார்ந்து   லேட்டானதுக்கு   காரணம்   கேப்பார் . காரணம் கேக்குறது பெருசு இல்ல அதை  இங்கிலிஷ்ல கேப்பார். அதான் பிரச்சினையே.

 நம்மளுக்கு இங்கிலீஷ்  எல்லாம் இன்கமிங் மட்டும்தான் .நோ அவுட் கோயிங். அதுனால அவரு கேக்குற அத்தனை கேள்விக்கும் சளைக்காம டக்கு டக்குன்னு   தமிழ்லயே பதில்  சொல்லி ரொம்ப சில நாள்  மட்டும் உள்ளேயும் பலநாள் வெளியே "அக்கா கடை" இல்லன்னா "மாமா கடை"யில  இருந்து எங்க காலேஜை பத்திரமா பார்த்துக்குவோம் . 

இப்புடி எங்களப் போன்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்ஸ கடுப்பேத்துற 
"வெள்ளைக்கார நாதன்" எங்க ப்ளாக்ல இருந்த பாத்ரூமுக்கு  போக, இதைப்  பார்த்த நாங்க, அந்த ரூமை வெளிய பூட்டிட்டோம் . கொஞ்ச நேரம் கழிச்சு அவரு கதவ தட்ட, நாங்க யாருன்னு கேட்க,  அவரு மெதுவா "நாதன்" ன்னு சொல்ல நாங்க "நாந்தான்னா" யாருய்யா ? உன் பேர  சொல்லுன்னு சொல்லி ரொம்ப   நேரம் சத்தெடுத்தோம் .இடைக்கு இடையில அந்த கதவு நாதங்கிய புடிச்சு தொறக்கிற மாதிரி நாங்க  பாவ்லா  பண்ணுறதும் , அவரும் வேகமா கதவைத் தொறக்க முயற்சி பண்ணுறதுமா ரொம்ப சுவாரஸ்யமா போச்சு எங்களுக்கு. 
அப்புறம்  போனா போகட்டும்ன்னு  அவரு வயசு, காலேஜ்க்கு அவர் பண்ணின சர்வீஸ் எல்லாத்தையும் மனசுல வச்சி கடைசி வரைக்கும் கதவை  தொறக்காமலே அப்புடியே விட்டுட்டு போய்ட்டோம். 

 அப்புறம் என்ன  அவரு டூட்டில  இருந்தாருன்னா , நாங்க கேட்டை மட்டும் பார்த்து தொட்டு கும்பிட்டுட்டு,13வரியில உள்ளதை செய்ய ஆரம்பிச்சுடுவோம் .
#2:குரு :
இவர் பேர் குரு, அவரு ஊதினா நாம பறந்திடுற மாதிரி நல்லா ஓங்கு  தாங்கா இருப்பார். இவரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுதான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குற குரு கையில ரெண்டு, மூணு சிகரெட்டை  அவர் கையில வச்சு அழுத்துனா போதும் கேட்டு திறந்திடும். உள்ளே போக, வெளியே வர ரெண்டுக்கும் இதுதான் ப்ரொஸீஜர்.         

வகுப்பிலிருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரு மதியம், ரூமுக்கு போகலாமுன்னு வந்தா கேட்டுல நம்ம "குரு". சரி சிகரெட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்தா யார்கிட்டயும் இல்ல. கீழ கிடந்த ஒருகிங்க்ஸ்  சிகரெட்டு பாக்கெட்டுல , அக்கம் பக்கம்  கிடந்த ஒட்டு பீடிய பொருக்கி போட்டு கொண்டு போயி குடுத்தோம்.  சிரிச்சிகிட்டே உள்ள பார்க்காம வேகமா  வாங்கி பேன்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டு கதவை தொறந்து விட்டுட்டாரு.

அடுத்த முறை அவரைப் பார்த்த போது, அவர் திட்டிய திட்டெல்லாம் எழுதினால் அது கெட்ட  வார்த்தைகளின் அகராதியாக இருந்திருக்கும்.
இப்படியாக ரெண்டு வாட்ச்மேன்களிடமும் பஞ்சாயத்து ஆகிவிட்டதால் நாங்க திருந்தி ,  

"காலேஜுக்கு லேட்டா   போறதை படிப்படியா  குறைச்சிக்கிட்டோம்.!!! அவ்வ்வ்வ் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Monday, September 23, 2013

நிக்கோடினா ஒரோல்ஸ்.

1999
காலேஜ் பர்ஸ்ட் இயர்  படிக்கும்(??!!) போது படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும்  செய்யுறது.  எங்க பக்கத்து ரூம்ல ஒரு அஜீத் குமார் இருந்தான். அவன் எப்போதும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னுகிட்டே  வராத மீசையை வா வான்னுட்டு இருப்பான். ஒரு பரு வந்துடுச்சுன்னா  போதும் ரூம் புல்லா கலர் கலரா மருந்து வாங்கி வைச்சிருப்பான்,  நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி  மூஞ்சில எதையாவது   அப்பிக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களை பயமுறுத்தி கிட்டு இருப்பான்.

வழக்கம் போல படிக்காம  பேசிக்கிட்டு இருக்கிற "சைலன்ஸ் அவர்ல" அவனைக் கலாய்க்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டோம் . நம்மாளுதான் மூஞ்சுக்கு போடுற பவுடர் அல்லது  க்ரீம்ன்னா  உயிரை விடுவானே அதுனால அவனுக்காக ஒரு  பவுடர் தயார் பண்ணினோம், அதோட மூலப் பொருட்கள் என்னன்னா

1.சர்ப்  சோப் பவுடர்
2.பாண்ட்ஸ் பவுடர் (கொஞ்சம் )
3.ப்ளீச்சிங் பவுடர்   (கொஞ்சத்துல கொஞ்சமா)

நல்லா  மிக்ஸ் பண்ணிட்டு,  ஒரு சின்ன டப்பால போட்டு வச்சிட்டோம் . நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது  ஒருத்தன் ரொம்ப கேஷுவலா கேக்குற மாதிரி மச்சான் ஜோதி, உங்க மாமா லண்டன்லேருந்து வாங்கி வந்த பேஸ்  வாஷ் நல்ல இருக்குடா அப்படின்னு சொன்ன உடனே,

"மசால் வடையை பார்த்த எலி மாதிரி'' பாஞ்சு வந்து எனக்கு எங்கடான்னு, எனக்கு எங்கடான்னு எக்கோ எபக்ட்டுல கேட்டுட்டு, கூடவே அதோட பேரு என்னடான்னு கேட்க, நாங்கள் திகைக்க  என் நண்பன் ஒருவனோ சட்டென்று வைச்சான் பாருங்க பேரு "நிக்கோடினா  ஒரோல்ஸ் ."

பேரே பாரின் பிகர் மாதிரி இருக்கதால நம்மாளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
மச்சான் ரொம்ப காஸ்ட்லியான பவர்புல்  பவுடர் கொஞ்சமா தண்ணில கலந்து போடு, மூஞ்சில  அரிச்சா பவுடர் வேலை செய்யுறதா அர்த்தம்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டோம்.

நம்மாளும் அதை தொடர்ச்சியா நாலஞ்சு நாள்  போட்டு மூஞ்சில வெள்ளை வெள்ளையா சொறி வந்ததுதான் மிச்சம். மூஞ்சை சொறிஞ்சது சகிக்காம நண்பன் ஒருத்தன் "நிக்கோடினா  ஒரோல்ஸ்" சோட பார்முலாவை நம்ம அஜித்குமார்கிட்ட சொல்ல, அப்புறம் கேப்டன் விசயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு செவக்க  செவக்க  "செந்தமிழ்" ல ஒரு அரைமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்தான் எங்களுக்கு .

2013
இப்போ அந்த அஜித்குமார் யு. எஸ் ல இருக்கான்.  கொஞ்ச நாளைக்கு முன்பு பேசியவன் ஊருக்கு போறப்போ ட்ரான்ஸிட்  துபாய் வர்றதாகவும் , கண்டிப்பா மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டு   வர்றப்போ   என்னடா வேணும்ன்னு   கேட்க,  யு .கேன்னா கிடைக்கும் மச்சான் ஆனா  யு. எஸ் ல கிடைக்குமான்னு தெரியலயேன்னு  சொல்ல அப்படி என்னடா இங்க கிடைக்காததுன்னு  கேட்க, நானோ "நிக்கோடினா  ஒரோல்ஸ் " ன்னு சொல்ல, டமார்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு அது அவனோட மொபைலா இருக்குமோன்னு தோணுது!!! உங்களுக்கு என்ன  தோணுது ??



வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Saturday, February 4, 2012

மச்சான் உனக்கு எத்தனை?



எங்க கல்லூரி நாட்கள்ல செமஸ்டர் ரிசல்ட் வந்த ஒரு  வாரத்துக்கு  இந்த வாசகம் ரொம்பவும் பிரசித்தி பெற்றது. பொதுவா இதுக்கு அர்த்தம் உனக்கு எத்தனை அரியர் இருக்குன்னு ஆனா எங்கள பார்த்து இத கேட்டா நாம எத்தன பேப்பர் பாஸ் பண்ணி இருக்கோம்னு அர்த்தம் அந்த அளவுக்கு சரஸ்வதி தேவியோட  கருணை  இருந்துச்சு ..

கல்லூரியோட தரத்த உயர்த்த நிர்வாகம் ரொம்ப முயற்சி  பண்ணாங்க, அதுல ஒண்ணுதான்  மாடல் எக்ஸாம் வைக்கிறது. எக்ஸாம் வச்சா மட்டும் போதுமா அத எழுத ஆள் வேண்டாமா ? ஒரு பய எக்ஸாம் எழுத வர்றது இல்ல . நீங்க ஒன்னும் எழுதி கிழிக்க வேண்டாம் நீங்க வந்தா மட்டும் போதும் அப்படிங்கற அளவுக்கு நிர்வாகம் வந்துருச்சி .. அதுனால நம்மளோட பங்களிப்ப செய்வோம்னு நம்மளும் லேட்டா  போயிட்டு  சீக்கிரம் வந்திடுறது ....இத பார்த்த ஒரு ப்ரொபசர் இனிமே லேட்டா வந்த உள்ள விட மாட்டேன்னு சொல்ல நாங்களும் வழக்கம் போல தலைய ஆட்டிட்டு உள்ள வந்தாச்சு ..கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் என் நண்பன் ஒருவன்.   ப்ரொபசர் அவன்கிட்ட வந்து ஏன் ஒன்னும் எழுதாம இருக்கேன்னு கேட்க, அவன் ரொம்ப அமைதியா தவறுதலா நாளைக்கு  உள்ள எக்சாமுக்கு மாத்தி படிச்சிட்டேன்னு  சொல்ல ப்ரொபசர் கடுப்பாகி ஒன்னும் சொல்ல முடியாம போயிட்டாரு ...
    
அடுத்த நாள் வழக்கம் போல நாங்க லேட்டா வர,  ப்ரொபசர் ரொம்ப உணாச்சி வசப்பட்டு உங்கள உள்ளே விடமுடியதுன்னு சொல்ல, நாங்களும் சரி சார்   கிளம்புறோம் ஒருவேள போற வழியில பிரின்சிபால் பார்த்துட்டு  ஏதாவது கேட்டா,  நீங்க உள்ள விடலன்னு சொல்றோம்னு சொல்ல  அவரு ரொம்ப கடுப்பாகி ஒரு அஞ்சு நிமிஷம் கத்திட்டு உள்ள அனுமதிச்சாரு..ஏன்னா அவருக்கும் ப்ரின்சிபாலுக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு ...

உள்ள வந்த நாங்களும் கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல சும்மா உட்காந்து இருந்தோம்.என் நண்பனும் சும்மா இருக்கிறத பார்த்த  ப்ரொபசர் வேகமா என் நண்பகிட்ட போயி , நீதான் நேத்தே இந்த பேப்பருக்கு படிச்சுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் ஒன்னும் எழுதாம உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க அவன் ரொம்ப கூலா, "படிச்சது எல்லாம் மறந்து போச்சு சார்" அப்படின்னு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க ப்ரொபசர் நொந்தே போய்ட்டாரு. அப்புறம் என்ன எங்க வீட்டுல பண்ணினத அவரும் பண்ணிட்டு விட்டுட்டாரு . அதாங்க தண்ணி தெளிச்சு   விட்டுட்டாரு.               

செமஸ்டர் எல்லாம் ஒன் டே<காலையில ஒன்னு ,மதியம் ஒன்னு >     , டெஸ்ட் மேட்ச் <தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு எக்சாம்>   ரேஞ்சுக்கு எழுதுறது.  இதே ரேஞ்சுக்கு எழுதுன  செமெஸ்டருக்கு  ரிசல்ட் வந்துச்சு ...எனக்கு ஒரு சென்டிமென்ட் என்னன்னா நம்மளோட ரிசல்ட்ட நாம மொதல்ல பார்க்கிறது இல்ல, நண்பர்கள் எல்லாம் பார்த்துட்டு சொன்னதுக்கு அப்புறமா மனச கொஞ்சம் திடப்படுத்திக்கிட்டு பார்க்கிறது . சில சமயம் அதிர்ச்சியா  ஆல் கிளியர் பண்றதும் உண்டு. அப்படி ரிசல்ட் வந்த நேரம்  நண்பர்கள் எல்லாரும் ரிசல்ட் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க, நான் போய், மச்சான் உனக்கு எத்தனை  ?  மாப்ள உனக்கு எத்தனை? அப்படின்னு கேட்டுட்டு இருந்தேன், அதுல ஒருத்தன் மட்டும் ரொம்ப சோகமா இருந்தான், என்ன ஆச்சுடா மச்சான்னு நான் கேட்க, கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொன்னான்,


"கொய்யால மூணாவது முறையா பர்ஸ்ட் இயர்  வாஷ்  அவுட்டுடா மாப்ள " .

 வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் .     






   

Thursday, February 2, 2012

உன் வயசென்ன மச்சான்!!!

                                       எல்லோருக்கும் காலேஜ் லைப் ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.  என்னுடன் கூட படித்த  நண்பர்களும்   என்கூடவே அதே காலேஜ்ல சேர்ந்ததால நம்மளுக்கு ரொம்பவே விசேஷம்.....முதல் வருடம் ஹாஸ்டல் வாழ்க்கை ரொம்ப அமர்க்களமாக இருந்தது.  ராகிங் தொல்லைக்காக   பர்ஸ்ட் இயருக்கு தனி ஹாஸ்டல், தனி மெஸ் , காலேஜ் போகும் போது   பாதுகாப்புக்கு  ரெண்டு மூணு  வார்டன் எல்லாம் உண்டு .... ஆனா சீனியர்ஸ் அதையும் தாண்டி   வந்து அடி பொளந்துட்டு போயிருவாங்க ......

லேப் ல  அவுட்புட் வரலன்னு யாராவது லேட்டா வந்தான்... தொலைஞ்சான் ..அங்க வராத   அவுட்புட் எல்லாம்  இங்க வந்திரும்......எல்லா பிரச்னையும் ரூமுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறந்து போயிரும் .. அவ்வளவு ஜாலியா இருக்கும் .... எங்களோட பொழுது போக்குல ஒன்னு  என்னன்னா ரூமுக்கு வர்ற பசங்ககிட்ட  பிறந்த தேதி கேட்டு கலாய்க்கிறது..எங்க ரூம்மேட்ட பார்க்க   வர்ற   பசங்கள எல்லாருக்கும்  அறிமுகப்படுத்தி வச்சிட்டு சபையில   விட்டுடுவான். கொஞ்ச நேரம் அவன்கிட்ட இயல்பா பேசிக்கிட்டு இருந்துட்டு   .. எங்கள்ள ஒருத்தன் வயசு என்ன மாப்ள அப்படிம்பான், நம்மாளும் பதினெட்டு , இல்ல பத்தொம்பது அப்படின்னு சொல்ல ..எல்லாரும் ரொம்ப ஷாக்காகி என்ன சொல்ற என்ன மாப்ள இப்படி சொல்ற என் வயசு எட்டு தான் ஆகுது, மாமா உனக்கு எத்தனைன்னு பிரெண்ட பார்த்து கேட்க அவங்களும் எட்டர, ஒன்பது இந்த ரேஞ்சுக்கு சொல்ல நம்மாளு  லைட்டா   டரியல் ஆவான் ....   

உடனே  நீ எந்த  வருஷம் பொறந்த .... அப்படின்னு  கேட்க நம்மாளும் அவன் பொறந்த வருஷத்த  எண்பது,எண்பத்தொன்னு ரேஞ்சுக்கு சொல்ல ..நாங்க ரொம்ப கேஷுவலா ஒ...  தொண்ணூறு , தொண்ணுத்தி ஒன்ன  தான் மாத்தி சொல்லிட்டியான்னு கேட்க அவன் கொஞ்சம் யோசனையா இல்லையே மாப்ள  நான் எண்பதுலதான்  பொறந்தேன்னு சொல்ல .. அப்படின்னா முதியோர் கல்விக்கு போக வேண்டியதுதான எதுக்கு இன்ஜினியரிங் காலேஜ் வந்த .. அப்படின்னு கேட்டு அவன ஊறுகாயா ஆக்கி நம்ம பொழுத போக்க  வேண்டியது ...
அப்படி     ஊறுகாயா ஆனவங்கள்ள  பல பேரு அவனோட ரூமுக்கு போயி மார்க் ஷீட்ட பார்த்து அவனோட சந்தேகத்த நிவர்த்தி பண்ணிருக்காங்கன்னா பாத்துக்கோங்க  ....

இதுல ஹைலைட்டு என்னான்னா எங்க ரூம்ல இருந்துகிட்டு  அவன் காரிடார்ல போற பசங்கள பார்த்து மச்சான் உன் வயசு என்னன்னு அவன் கேட்க அவங்களும்   எட்டர, ஒன்பது அப்படின்னு சொல்ல நம்மாளு முகத்துல  ஈயாடாது .....

அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா ??? 
 ஒருகாலத்துல  அவங்களும்  நமக்கு ஊறுகாயா ஆனவங்கதான் !!!!!!!!!!!!!!!!!


      வாழ்க வளமுடன்...  தமிழ் தந்த புகழுடன் ...