Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Saturday, January 19, 2013

சமர் – பார்த்தீங்கன்னா உங்களுக்கு திமிர்.

“மனித வேட்டை”ன்னு ஒரு சுபா எழுதின ஒரு கதையில 4 பணக்காரங்க பொழுது போகாம காட்டு மிருகங்களை அவங்களோட தீவுல வேட்டையாடி போரடிச்சு, மனிதனை கொண்டு வந்து அந்த தீவுல விட்டு வேட்டையாடுவாங்க அதேமாதிரியான கதைதான் இதுவும்.

ரெண்டு பணக்காரத் திமிர் பிடிச்ச  _ _ _  _ _ _ _ கேப்புல எதாவது கெட்ட வார்த்தை போட்டுக்கங்க. ஹீரோவை டார்ச்சர் பண்ணுறதா நெனைச்சு படம் பார்க்க போன நம்மள மாதிரியான அப்பாவிகளை டார்ச்சர் பண்ணுறதுதான் கதை. படத்தோட ஆரம்பத்துலேயே “எலெக்ட்ரிக் சா” கொண்டு வருவாங்க நான் கூட மரம் அறுக்கத்தான் கொண்டு வராங்கன்னு நெனைச்சா அப்புறம் தான் தெரிஞ்சது அது படம் பார்க்க போன நம்ம கழுத்த அறுக்கத்தான்னு.. என்னத்தை செய்ய?? விதி வலியது!!!

பாங்காங்க்கு ஒசி டிக்கெட்டுல போன நம்ம விசாலு ரொம்ப திறமையா நவரசத்தையும் மூஞ்சில காட்டி நடிச்சுருக்காப்ல. ஆனா நம்மளுக்குத்தான் கடுப்பைத் தவிர வேற எந்த உணர்ச்சியும் வரமாட்டேங்குது.

இந்த ஊரில பெரிய டான் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஸ்ரீமனைக் காட்டுறாங்க அப்போ அவரும் கைல டாட்டூ குத்திக்கிட்டு ரொம்ப டெரரா இருக்காரு.. படம் பார்க்குற எல்லாரும் பயத்துல கண்ணை மூடிக்கிட்டாங்க…. (வடிவேலுவுக்கு ரீப்ளேஸ்மென்ட் போல பார்த்த ஒடனே சிரிப்பு வருது….)

பயங்கரமான திருப்பங்கள் படம்  நெடுகவளைஞ்சு வளைஞ்சு ஒட
நம்மளுக்குத்தான் ரொம்ப குஷ்டமா இருக்கு.. ஆனா நம்ம விசாலு   பஸ்,காரை எல்லாம் அப்படியே அலேக்கா தாண்டி, தாண்டி வில்லனை தொரத்திகிட்டு ஒடுறார். அப்படி ஒடி கடைசியா ஒரு ட்ரைனேஜ் மேன்ஹோல் பக்கத்துல ஒக்கார்ந்து உத்து உத்து பார்ப்பார். ஏன்னா மந்திரவாதி படத்துல வர்ற மாதிரி, ட்ரைனேஜ் மேன்ஹோல் அந்த வில்லனை விழுங்கிடும். அப்பாடா இடைவேளை…

ஆனா அந்த சனியன் பிடிச்சவன் சாகுறதுக்கு முன்னாடி வில்லனை பத்தி குடுக்குற பில்டப்பும், ரெண்டு சைக்கோ வில்லனும் கை தட்டி சிரிக்கிறதையும் பர்த்துட்டு சரி இனிமேதான் படமே அப்படின்னு தப்பா கணிச்சுட்டு உள்ளே போனா, ரெண்டு சைக்கோ வில்லனும் சிரிச்சு சிரிச்சே நம்மள சாகடிக்குறானுங்க…

அது எப்படி இருக்கும்ன்னா ஏண்டா எவ்வளவு தெகிரியம் இருந்தா இடைவேளைக்கு அப்புறமாவும் நீங்க படம் பார்க்க வந்திருப்பீங்கன்னு நம்மள பார்த்து கேக்கிற மாதிரி இருக்கும்.

ஒரு ஸீன்ல நம்ம விசால் கேப்பார் ஏண்டா என்னைய சாகடிக்குறீங்கன்னு அதுக்கு உன்னைய மட்டுமா படம் பார்க்க வந்த எல்லாரையும் தானேன்னு மைண்ட் வாய்ஸ் கேக்குறத மறைக்க முடியல..

காஸ்ட்யூம் டிசைனருக்கு பாதி சம்பளம்தான் போல, த்ரிஷாவை ரொம்ப நேரமா ஒரே ட்ரெஸ்ஸோட சுத்த விட்டுட்டாங்க கடைசில. அந்த ட்ரெஸ் எப்படி இருக்கும்னா ரிங் மாஸ்டருக்கு தெரியாம பாதியில கூட்டி வந்த சர்க்கஸ்காரி போட்டிருக்கிற ட்ரெஸ்ஸேதான் அது.

கடைசியா படம் முடிஞ்சதுக்கு அப்புறமும் நம்மளை கடுப்பேத்திட்டாங்க எப்படின்னா “WRITTEN& DIRECTED BY THIRU” ன்னு போட்டு அவரை மறக்க முடியாதபடி செஞ்சிட்டாங்க. (நம்மள கொலைகாரனா ஆக்காம விடமாட்டாங்க போல!!)

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

Saturday, September 29, 2012

தாண்டவம் தண்டனையா !!!

நம்ம சீயான்  விக்ரம், அனுஷ்கா வோட சோடி போட்டு நடிக்க, படம் பட்டைய கிளப்பும்ன்னு பார்த்தா நம்மளுக்கு கடுப்பதான் கிளப்புது.
தாண்டவம் படத்தோட கதை என்னன்னா நண்பனோட துரோகத்தால  "ரா" ல   இந்தியாவின் டாப்  அஞ்சு  பேருல ஒருத்தரா இருக்குர விக்ரம் அவரு     பொண்டாட்டியையும் , கண்ணையும் ஒரு குண்டு வெடிப்புல பறிகொடுத்த கடுப்புலஅதுக்கு காரணமான எல்லாரையும்  பழிவாங்குறது தான் கதை.  
 
கண்ணு தெரியாமல் நம்ம விக்ரம் அசால்ட்டா போய் , நாயர் கடையில டீ குடிக்கிறமாதிரி  கொலைகளை பண்றாரு கூடவே நம்மளையும். இதெல்லாம் அவரு எப்படி செய்ராருன்னு நாம தண்ணிய குடிச்சு குடிச்சு யோசிக்கும் போது படத்துல சொல்றாங்க அது ஒரு " எக்கோ லொகேஷன்  டெக்னாலஜியாம்"   என்னமோ போடா மாதவா !!!
இடையில் எமி ஜாக்சன் வேறு, போட்டோ ஷூட்டுக்கு அப்புறம் கண்ணு தெரியாத விக்ரமை இம்ப்ரெஸ் பண்ண சர்ச்சில் சர்வீஸ் செய்வதும், கண்ணைக்கட்டி கொண்டு நடந்து மூஞ்சி,  முகரையை உடைத்து கொள்வதும் சகிக்கல. 
அடுத்ததா அத்தாச்சி லட்சுமிராய் , விக்ரமிடம்  கொல்லவேண்டியவனை பற்றி தகவல் தருவது ஏதோ CIA  ஏஜென்ட்  ரகசியம் காப்பது போல சொல்கிறார்கள் முகத்தயே காட்டாமல். பின்பு முகவரியை ஐ போனில் sms வேறு அனுப்புகிறார். கண்ணு தெரியாதவர் எப்படி படிப்பாருன்னு(ப்ரைலி எல்லாம் இதுல வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல) கேட்டா அதுக்கு  ஏதாவது   "தடவிங்  டெக்னாலஜி" என்று புது பெயர் சொன்னாலும் சொல்வார்கள்.

கல்யாண பொண்ணு  அனுஷ்கா மாப்பிள்ளை என்னாவா இருக்காருன்னு கூட தெரியாம அவர கல்யாணம் பண்ண சம்மதிச்சு டெல்லிலேருந்து  வர்ற அப்பாவி  கண் டாக்டர் . விக்ரம் சொல்ல நினைச்சிருக்கும் அதே மொக்கை காரணங்களை சொல்லி ( பார்க்கணும், பிடிக்கணும் ,பழகனும் , பிரண்ட்ஸ் , காதல் ,கல்யாணம் அப்புறம்தான்   லொட்டு லொசுக்காம்" )
இதையெல்லாம் "லொட்டு லொசுக்குக்கான"  ராத்திரியில  அனுஷ்கா சொல்றாங்க, கூடவே விக்ரம் மச்சினிச்சி (நல்ல பிகருங்க ) அக்காவின் அருமை பெருமைகளை சொல்ல  இதைகேட்டு விக்ரம் இம்ப்ரெஸ் ஆகி பியானோவும்,  கையுமா சுத்துறார் பொண்டாட்டிய  லவ் பண்ண !! புதுசா இருக்குல்ல!!!! ( மௌன ராகம் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம்  இல்ல!!!!!! ) .

படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் சந்தானம் வருமிடங்கள்.முதல் கொலையை சந்தானம் போலீசிடம் சொல்கையில்
 சார் திஸ் இஸ் டெட் பாடி, கம்மிங் ப்ரம் மொட்ட மாடி, கமிங் கமிங் அண்ட் டேமேஜிங் கார் பாடி என்று கிளாஸ் டம்ளரை உடைக்குமிடமாகட்டும், விபத்து நடந்தவுடன் டைமிங்காக வரும் "ஒளிமயமான எதிர்காலம் பாடலும்"  நாசருக்கு நக்கலாக பதில் சொல்வதாகட்டும் எல்லா இடங்களும் சரவெடி பட்டாசு.
 நீரவ் ஷா வோட ஒளிப்பதிவு அட்டகாசமா இருக்குது. அனுஷ்கா புறாக்களுக்கு இரை  போடுமிடமும், கல்யாணப் புடவையில் வருமிடமும்  அருமை. பின்ணணி இசை பொருந்தி இருக்கிறது  .இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

கேள்வி கேட்கணும்னா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு லாஜிக் ஓட்டைகள். வேற வழியே இல்லன்னா ஒரு படம் பார்த்தே தீரனும்னா, இல்லாட்டி ஓசி டிக்கெட்டுன்னா  பாருங்க படத்த, விக்ரம் படம், தெய்வதிருமகள் விசய் படம்ன்னு போனீங்கன்னா உங்க பர்சுக்கும், கடுப்பாகி உங்க உடம்புக்கும்   சேதாரம்தான்!!!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!