Showing posts with label பள்ளிகூடம். Show all posts
Showing posts with label பள்ளிகூடம். Show all posts

Thursday, September 5, 2013

ஆ "சிறந்தோர்" தினம்.

"டேய் மொட்டை நீ வந்து வாசி" .

போர்டில் டீச்சர் எழுதி போட்டிருப்பதை   வாசிக்க வேண்டும்.தவறாய் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் டீச்சருக்கு வாகாய்  இருக்கும்  இடத்தில் தலையிலோ, பின்பக்கத்திலோ  அடி விழும்.

"ஜ"வுக்கும்   " ஐ "க்கும் வித்தியாசம் தெரியாமல் தவறுதலாய் வாசிக்க, டீச்சரிடம்  இருந்த பிரம்புதான்  அந்த வித்தியாசத்தை உணர்த்தியது.
ஒரு நாள்  நீரில் மிதக்கும் பொருள்களை சொல்லுமாறு வகுப்பில் பொதுவாய் கேட்க நான் "கரித்துண்டு" என்று பட் டென்று சொல்லி வாங்கிய "முதல் கைத்தட்டலுடன்" ஆரம்பமானது எனது பள்ளிப்படிப்பு.

சராசரி மாணவனாக இருந்த என்னை  நன்கு படிக்கும் மாணவனாக  மாற்றியது அந்த மூணாப்பு  டீச்சரின் அன்பும் வழிகாட்டுதலும் தான்.

அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதல்கள். ஐந்தாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜெயித்தது.ஆறாம்  வகுப்பில் நடந்த  க்விஸ் ப்ரோகிராமில்  ஜோனல் லெவலில் முதல் பரிசு பெற்றது. இப்படி நிறைய ..
ஏழாம்  வகுப்பில்  தேசியப்பறவை வரைந்து அதனடியில் ஒரு கவிதை கட்டாயம் எழுதவேண்டும் என டீச்சர்  சொல்ல,எனக்குள்ள ஒரு கவிஞன் பார்ம் ஆனது அப்போதுதான்,

பெண் கூந்தல்  போன்ற 
தோகை உடைய மயிலே 
நீ 
அடைபட்டது  கூண்டிலே அல்ல 
எனது மனச் சிறையிலே!!

என்று எழுதி பாராட்டப் பெற்றது, என பள்ளிப்பருவத்தின்  ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு எதையோ  கற்றுத்தந்து என்னை செம்மைப்படுத்தியவைதான்.

நடை பழகும் குழந்தைக்கு  விரல் பிடித்து நடக்க கற்றுத்தரும் ஒரு அன்னை போல் அனைத்தையும் கற்றுத்தந்து, கூடவே
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது  உலகளவு" என்பதையும் சொல்லித்தந்து, அனுதினமும் கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர வைத்த எனது ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

டிஸ்கி :  இது கவிதையா என்று யாரும் கல்லெடுக்க வேண்டாம் ... அவ்வப்போது எனக்குள் வீறு கொண்டு எழும் கவிஞனை, பதிவுலகத்தின் நன்மை கருதி அண்ணன் "வெளங்காதவன்" கமெண்டை  காட்டி கட்டிப் போட்டுள்ளேன் .ஹிஹிஹி....     

Wednesday, June 20, 2012

கணக்கு டீச்சரும் நானும்….


இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்…. அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா வரும்….. ஒரு மாட்ட செவ்வக வடிவில் உள்ள வயலின் மையத்தில் 10மீ நீளமுள்ள கயிற்றில் கட்டி இருப்பாங்க, மாடு தின்ன புல்லின் பரப்பளவு என்ன? அப்படின்னு கேட்டு இருப்பாங்க, அந்த கேள்விய படிச்சதுமே நம்ம மூஞ்சியில ப்யூஸ் போய்ரும்.. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோன்னு நாம ஆச்சரியப்படுற அளவுக்கு கணக்கு இருக்கும்…

அதுலயும் ரொம்ப ஈசியா இருக்க கணக்க டீச்சர் போட்டுட்டு, கஷ்டமா இருக்குற கணக்க நம்ம தலையில கட்டிருவாங்க…… அதையும் அப்பவே போட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க… இது நடக்குற காரியமா நமக்கு??!!!!!!! அப்டியும் ரொம்ப சீரியஸா கணக்கு போடுற மாதிரி ரூட்ட குடுக்குறது ஆனா இது எப்படிதான் அந்த டீச்சருக்கு தெரியும்ன்னு தெரியாது, அவ்ளோ பேரு இருக்குற க்ளாசுல என்னய கூப்பிட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க…. நாம அப்பதான் Given Data  அப்பிடின்னு போட்டு, அண்டர்லைன் எல்லாம் பண்ணி ரொம்ப அழகா எழுத முயற்சி பண்ணிட்டு இருப்போம். இவ்வளவு  நேரம் ஆச்சு என்ன பண்றே!!! அந்த நோட்ட எடு அப்பிடின்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் நோட்ட தூக்கி குடுத்துருவாங்க சில எட்டப்பர்கள். அப்புறம் என்ன  ஒரே அடிதடி தான்.

ஒருதடவை ரொம்ப புத்திசாலித்தனமா புக்குல கடைசியா இருக்குற ஆன்சர பார்த்து சொல்லிட்டேன். நம்ம நேரத்துக்கு அது தவறான விடையா போக, டீச்சர் என் நோட்ட வாங்கி பார்க்க, அப்புறம் என்ன ஒரே தீபாவளிதான்..

அந்த அடிதடி கூடஒ.கே, நான் தாங்கிருவேன், ஆனா அதுக்கு அப்புறம் ஒரு பத்து நிமிஷத்துக்கு பண்ணுவாங்க பாருங்க அட்வைஸ்… அதுலயும் உங்க அக்கா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றா நீ ஏன்டா இப்படி இருக்குற? அவ படிக்குற நேரத்துல நீ என்ன பண்ற? அப்பப்பா கஷ்டகாலம்டா சாமி... இதுல ஹைலைட்டா வார கடைசியில சர்ச்சுல பார்த்துட்டு அம்மா கிட்ட இவன் வர வர ஒழுங்கா படிக்கிறதே இல்ல ( நாம எப்பொ ஒழுங்காபடிச்சோம்!!!!!!!) அப்படின்னு வத்தி வைக்கிறது…… அப்டின்னு  நெறய பண்ணி நம்மளோட வயித்தெரிச்சலை ரொம்ப கொட்டிக்கிட்டாங்க…
சத்தியமா இன்னைக்கு இந்த டீச்சர் குறைந்த பட்சம் சர்ச்சுக்காவது வராமல் காப்பாத்து அப்படி எல்லாம் வேண்டி இருக்கேன்னா பார்த்துக்கங்க………..

அப்படி கும்பிட்ட எல்லா சாமிகளோட ஆசிர்வாதத்தால் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கும் போயாச்சு, இதுவரைக்கும் கணக்குல நான் படிச்ச வெக்டர், ð2X/ ð2Y, ஆய்லர்’ஸ் தியரி,வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் இது எல்லாம் என்னோட ப்ராக்டிக்கல் லைப்ல வரவே இல்ல…. நானும் பார்க்கிறேன் இதை எல்லாம் எப்பதான் யூஸ் பண்ண போறேன்னு………….!!!!!!!!!!!


               



வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………